விடியாத கடிதம்

விடியாத கடிதம்
*************************

நேசித்தவனின் உறவுகளை
உறவுமுறைச்சொல்லி அழைத்திருப்பாள்
கல்யாணம் என்னும்
சடங்குக்குப் பின்னால்
இன்னொருவனை நேசிக்கவேண்டும்
அவன் உறவுகளை
உறவுமுறைச்சொல்லி அழைக்கவேண்டும்
என்றாவது ஒருநாள்
கூட்டத்தினிடை
அவன் பெயர் அடிப்படும்போது
விழிகள் மேலோங்கும்
முகத்தில் நாணுணர்வி பூப்பூக்கும்
மூடலில் மோதும் காற்று
ஊடல் தொட்டு உடலை மெல்ல ஆளும்
வீட்டைவிட்டு வரும்போது
காலிப்பெட்டிக்குள்
அவள் அடைத்துவைத்த உணர்வுகள் எல்லாம்
விழியோரக் கரைகளிலே
விடியாத கடிதமெழுதும்
அவள் விரல்கொண்டு அழித்தழித்து

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (18-Jul-16, 2:43 am)
பார்வை : 115

மேலே