தொண்டன்

காலை முதல்
மாலை வரை காத்திருந்து
மாலை உதிராமல்
கைகளுக்குள் அடக்கிவைத்து
உன் தலைவன் வந்தவுடன்
அவன் கழுத்தில் சூட்டினாய்!

தேர்தல் நேரத்தில்
ஓடோடி ஓட்டு கேட்டாய்
எத்தனையோ ஓட்டு போட்டாய்!

செத்து போன உன் தாத்தா பாட்டிக்கும்
வாக்குரிமை வாங்கி தந்தாய்!

நீ ஓட்டு போட்ட
உன் தலைவன் வென்று விட்டான்!
நீயோ தோற்று போனாய்!

எழுதியவர் : (24-Jun-11, 5:18 pm)
பார்வை : 298

மேலே