நீ பார்த்த பார்வை
அன்று நீ என்னைப் பார்த்த பார்வை
உன்னை அல்லவா என் மனதில் விட்டுச்சென்றது
என் மனதோ உன்னிடம் பறிபோனது
இருவர் மனதும் சேருவது எப்போது
அதுவரை உன் நினைவில் காத்திருப்பேன் அன்பே
நினைவே நீ ஆனபின்னே
என் நடை உடை பாவனை எல்லாம்
வெறும் இயந்திரம் போல் ஆகிவிட்டதே
இன்னும் என்னைக் காக்க வைக்காதே
விரைவில் வந்து என் மனதில் சேர்ந்துவிடு
அதுவே உன் வீடு என்று அறிந்திடுவாய் அன்பே
---------------------------------