சீர்பெற்றேன் நானும் சிறந்து - நேரிசை வெண்பாக்கள் 7
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னவளே;
கார்கூந்தல் பெற்றவளே! கண்ணே! கனியமுதே
சீர்பெற்றேன் நானும் சிறந்து! 1
உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே!
காரோட்டும் அந்தக் கவின்,நிலவைக் காணுங்கால்
போராட்டம் தான்,என்னுள் போ! - 2
உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே!
போராட்டம் போக்கிடு! பொற்றாலி கட்டுவேன்
தேரோட்டம் தானினிமேல் தேர்! – 3
இரண்டாம், மூன்றாம் வெண்பாவின் ஈற்றடிகள் இரண்டும் திரு.எசேக்கியல் அளித்தது.
தேரோட்டம் இன்றுதான் காண் - பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்
உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே
பௌர்ணமியைப் பார்த்தது போல பரவசமே..
போராட்டம் போதுமே போ! 1
உன்னை,நான் பார்த்தால் உலகமே நீதானே
என்றுமே அந்நாள் முழுநிலவே – என்னமுதே
பௌர்ணமியைப் பார்த்தது போல பரவசமே..
தேரோட்டம் இன்றுதான் காண்! 2
‘இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்’ - அ வேளாங்கண்ணியின் நகைச் சுவைப் பகுதியிலிருந்து!