வடுக்கள்
வெகுநாட்களுக்கு பிறகு
எழுத அமர்கிறேன்..
நீ செந்தணலால்
பேசிய வார்த்தைகளின்
காயங்கள் ஆற
வடுக்கள் மட்டுமே
அதில் கண்ணீர்
கோடுகள் மட்டுமே
செல்லும் வழித்தடங்களாய்
மாறிவிட்டன..
மிச்சம் உள்ள வாழ்கை
எப்படியும் வாழ்ந்து தானே
ஆகவேண்டும்..
ம்ம்...
- வைஷ்ணவ தேவி