இனிப்பா உப்பா

இனிப்பா? உப்பா?

ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.

பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம் ‘ என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே என்ன சமாசரம் என வினவினார். பெரியநாயகம் வஷயத்தைக் கூறியதும் ‘இதுக்கா கவலைப் படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளி விடு. போ, வேலையைப் பாரு என்றான் ராமலிங்கம்.

இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி மறியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று போவோம்!. என்று வருந்தி தங்களை உற்பத்தி செய்யும் கரும்பினிடமும், கடலிடத்திலும் முறையிட்டன.

கரும்பு சொன்னது சர்கரையைப் பார்த்து நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட கல்யாணம் மற்றும் எல்லவைபவங்களுக்கும் நீ இல்லாமலா, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்கரைப் பொங்களிலும் உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு பிடித்ததும் கரும்புதான், அம்பாள் கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாத பொங்கல் விழாவா என்று தைரியம் கூறியது.

இதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. டேய் உப்பு! என்ன யோசிக்கிரே. நீ இல்லாம ஒரு பண்டமுண்டா. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் நீ தான், “உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்கு துரோகம் நினைப்பானா என்று தானே சொல்கிறார்கள்”. உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல பிராண்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டாய். நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே. தெரியாதா உனக்கென்ன குறைச்சல் என்றது கடல்.

ஒரு தினம் பெரிய நாயகம் தள்ளாடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, ‘ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டது..

என் காலில் ஒரு புண் வந்தது. அதுக்கு மருந்து போட்டும் இன்செக்ஷன் செய்தும் குணமாகலே. டாக்டர் சொல்றார். எனக்கு சக்கரை வியாதியாம். இனிப்பு சாப்பிட்டக் கூடாதாம். அப்போது தான் புன் குணமாகுமாம் என்று என்று புலம்பினான் பெறியநாயகம்.

அதனாலென்ன. இனிமே நீங்க சாப்பிடறதிலே சர்கரையை ஒதுக்கிடறேன் என்று சமாதானப்படுத்தினாள் அவன் மனைவி.

இதைக் கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்கரையைப் பார்த்து இளித்தது.

அப்போது ராமலிங்கம் அங்கு வந்தார். அவரிடம் எல்லாவற்றையும் விலாவரியாக கூறினார் பெரிய நாயகம்.

அதைக் கேட்ட ராமலிங்கம் கண்ணீர் விட்டார். உன்கதை இப்படி. என் கதை தெரியுமா. நான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிடம் எடுத்து சென்றார்கள். அவர் சோதித்துவிட்டு எனக்கு ரத்தக் கொதிப்பாம், கொழுப்பு சத்து அதிகரித்து விட்டதாம். உடன் சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம். அல்லது அறவே தவிர்க்க வேண்டுமாம் என வருந்தினார்.

இதை செவியுற்ற சர்க்கரை உப்பை ஏளனமாகப் பார்த்தது.

இனிப்பு உப்பைக் கூப்பிட்டு ‘நம்மைப் பற்றி நமக்கே தலை கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நம் தலையில் குட்டிப்பாடம் கற்பித்தார் என்றது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். என்பதையும் மருந்து போல் சாப்பிட்டால் விருந்து சாப்பிடலாம். விருந்து போல் சாப்பிட்டால் மருந்து தான் கதி!
இடுகையிட்டது NANTHA KUMAR

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (5-Aug-16, 12:14 pm)
பார்வை : 3253

மேலே