நம்பிக்கை
சூரிய ஔியை பூசிக்கொள்ள ஆசைப்பட்டு,
உன் நிழலை விட்டு நான் விலகிய போதெல்லாம்...
என்மேல் நீ கொண்ட உரிமை தீ, என்னை சுடுமே...
தனிமை வெப்பத்தால் என் விழி வியர்த்துவிட்டால்..,
என்மேல் நீ கொண்ட அன்பு மீண்டும் நகர்ந்து நிழல் தருமே...
உரிமைகளை சேர்த்து, நீ கட்டிய அணைகளை உடைத்துவிட்டு...
நம்பிக்கையை சேர்த்து, எனக்காக நீண்ட கரைகளை அமைத்துகொடு....
என் மனதிற்கு,
கால்கள் மட்டுமல்ல சிறகுகளும் உண்டு...
நீ கூண்டாக இருக்காதே, என் வானமாக மாறிவிடு...