காதல் காற்று

தலைவாரும் சீப்போடு
என் சொற்களும்
சிக்கிக்கொள்கின்றன
உன் கூந்தல் அருவியில்...!

சிக்கெடுக்க முடியாத
என் நினைவுகள்
சிதைந்து போகின்றன.
உனது
மெளன விழி மோகத்தில்..!

உன்னை
உள்ளில் கலந்து
கொஞ்சம் உணரவேண்டும்.

உனது
காதணியாய் நான் மாறி
காதலின் கதகதப்பை
புரிந்து கொள்ள
உன் கழுத்தோடு கொஞ்சம்
சகவாசம் நடத்த வேண்டும்..!

உண்மையைச் சொல்.
உன் கிறங்கும் விழிகள்
சொக்கிப்போயிருப்பது
கூந்தலோடு கலந்த
என் சொற்களில்தானே...?

அதைப்பிரித்தெடுக்க
சீப்பு எதற்கு அழகோவியமே...
உனது கண்களை
என் முகம் நோக்கித்திருப்பு.

என் மூச்சுக்காற்று
கோதுகின்ற உன் கூந்தலில்
எல்லாமே நேர்படும்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (7-Aug-16, 8:30 pm)
Tanglish : kaadhal kaatru
பார்வை : 188

மேலே