குழந்தை

தன் முயற்சியில்
சற்றும் மனம் தளராத
விக்கிரமாதித்தன்
அடுத்து என்ன செய்தான்
என்பதை சொல்ல
ஆரம்பிப்பதற்குள்
கதை சொல்லிக் கொண்டிருந்த
அப்பா உறங்கி விட்டதால்
தட்டி கொடுத்துக் கொண்டிருந்ததை
நிறுத்திக் கொண்டது ..
குழந்தை !

எழுதியவர் : கருணா (8-Aug-16, 11:31 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 284

மேலே