அன்னை
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா :
இருவிழிப் பார்த்தநொடி பொன்முகம் பூத்தாள்
ஒருமொழி பேசிடும்நாள் நற்கவி யென்றாள்
வருந்திக் கிடந்தவள் உள்ளம் மகிழ்ந்தாள்
கருவில் மலர்ந்தஉன் னால்......
ஒரு விகற்ப நேரிசை வெண்பா :
இருவிழிப் பார்த்தநொடி பொன்முகம் பூத்தாள்
ஒருமொழி நற்கவி யென்றாள் - சருகாய்
வருந்திக் கிடந்தவள் உள்ளம் மகிழ்ந்தாள்
கருவில் மலர்ந்தஉன் னால்......