தனிமரம்
வனாந்தரத்தில்
ஒற்றை மரமாய் நான்
நீங்கள்
இளைப்பாரிச் செல்ல
இடமுண்டு
என் நிழலில்
ஊஞ்ச்சல் கட்டியாட
கிளைகள் தருகிறேன்
பிறரை காயப்படுத்தி
பிழைப்பு செய்யும்
சுயநலமில்லை
எனக்கு
ஆனாலும்
உங்கள் பசிக்கு
பறித்துக்கொள்ளுங்கள்
பழத்தை
காயப்படுத்தாமல்.....