தனிமரம்

வனாந்தரத்தில்
ஒற்றை மரமாய் நான்

நீங்கள்
இளைப்பாரிச் செல்ல
இடமுண்டு
என் நிழலில்

ஊஞ்ச்சல் கட்டியாட
கிளைகள் தருகிறேன்

பிறரை காயப்படுத்தி
பிழைப்பு செய்யும்
சுயநலமில்லை
எனக்கு

ஆனாலும்
உங்கள் பசிக்கு
பறித்துக்கொள்ளுங்கள்
பழத்தை
காயப்படுத்தாமல்.....

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (19-Aug-16, 2:50 pm)
Tanglish : thanimaram
பார்வை : 172

மேலே