சந்தோஷமும் வருத்தமும் தான் வாழ்க்கை
சந்தோஷமும் வருத்தமும் தான் வாழ்க்கை
புனே நகரத்தில் உள்ள மிலிட்டரி இன்ஜினியரிங் ஏரியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு குடுமபத்தில் நல்லவைகள் நடந்து எல்லோரையும் மகிழ வைத்திருந்த நேரம் அது. அந்த குடும்பத்தின் தலைவர் தலைமை என்ஜினீயர் ஆக இருந்தார். மிலிட்டரி டவுன் ஆகையால் அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளும் கிடைத்து குடும்பம் செவ்வனே நடக்க பல வேலையாட்கள் உதவி புரிந்தனர். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால் மூன்று வருடங்கள் தான் ஒரு இடத்தில் அவர்களால் இருக்க முடியும்.பின் அவர்களை இடம் மாற்றி விடுவார்கள். குழந்தைகளில் படிப்பு பாதிக்கப் படாமல் இருக்க வேண்டி அரசாங்கமே அவர்கள் எங்கு மாற்றிச் சென்றாலும் உடனே அவர்களை ஒரு வீட்டிலிலும் குழந்தைகளைப் பள்ளியிலும் சேர்த்து அவர்களுக்கு உதவிக்கும் ஆட்களை வைத்திருப்பர். இதனால் எவ்வளவு இடமாற்றம் ஏற்பட்டாலும் எப்பொழுதும் தொல்லையாக இருந்ததில்லை. அந்த அமைதியான குடும்பத்தில் முதலில் பிறந்தது இரண்டு பெண் பிள்ளைகள் இருவருக்கும் இடையே மூன்று ஆண்டுகள்தான் வித்தியாசம் . இருவரும் பள்ளியில் நன்றாக படித்து தங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று மாலை வேளையில் மகிழ்ச்சியோடு விளையாடி தங்கள் நேரத்தை கழித்தனர். எல்லோருடைய அப்பாக்களும் மிலிட்டரியில் வேலை செய்வதால் குழந்தைகளின் கூடவே ஒரு செக்யூரிட்டி இருப்பது வழக்கம். அப்பொழுது தான் அந்த ஒரு நல்ல விஷயம் நடந்தது குட்டி கண்ணன் பிறந்தான். அவர்கள் அப்பொழுது அஸ்ஸாமில் உள்ள திப்ரூகர் என்ற ஒரு இடத்தில் இருந்தனர் அவனது பிறப்பினால் வீடே குதூகலமாகி எல்லோரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்.
பிறந்த மூன்றாவது வருடம் அவர்கள் ஜம்முவிற்கு மாற்றல் ஆகினர். இதுபோல் மூன்று முறை மாற்றல் ஆகி இப்பொழுது கண்ணனுக்கு வயது ஒன்பது அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள்.
கண்ணனுக்கு ஆருயிராய் ஓர் நண்பன் இருந்தான். அவன் பெயர் தீபன். இருவரும் சேர்ந்து கராத்தே , காற்பந்து, கணினியில் விளையாட்டுகள், விதம் விதமான உருவங்களை, லெகோ போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்குதல் என்று தமது விளையாட்டு உலகில் மூழ்கி மகிழ்வார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விளையாடி மகிழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது.
ஒரு நாள் திடீரென்று தீபன் பள்ளிக்கு வரவில்லை. கண்ணன் தொலைபேசி அழைப்பு மூலம் கேட்டதில் தீபனுக்கு காய்ச்சல் , இருமல், தொண்டை நோய் , மற்றும் மூச்சு சுவாசிக்கக் கடினம் என்பதை அறிந்து கொண்டான். தீபன் காய்ச்சல் குணமடைந்து விரைவில் வழக்கமான நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்று மனதில் நினைத்துக் கடவுளை வேண்டி கொண்டான்,
நாட்கள் நகர்ந்தன. மூன்று வாரங்களுக்குப் பின் தீபன் குணமடைந்துவிட்டதாகவும், மீண்டும்பள்ளிக்கு வருவான் என்று . அவனிடமிருந்து ஓர் குறுந்தகவலைப் பெற்றுக்கொண்டான்.. கண்ணன்.உடனே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான். அடுத்த நாள் வியாழக்கிழமை பாடசாலைவிட்டதும் கண்ணன் தீபனை வீட்டிற்கு அழைத்துவர விரும்பினான்.
அவன் அப்பாவின் கார் என்றும் வந்து அவனை கூட்டி செல்லும் அன்று அப்பாவும் அவர்களது ஓட்டுனரும் வெளியே சென்று விட்டதால் ஒரு புதிய காரும் ஓட்டுனரும் வந்து நின்று கொண்டிருந்தனர். கண்ணனுக்கு அது தெரியாததால் அவன் வெளியே வந்து நின்று கொண்டிருக்க புதிய ஓட்டுனர் அவன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளாமல் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களை நோக்கிய படி நிற்கும் பொழுது சாலைக்கு எதிர் பக்கத்தில் தீபனை பார்த்த கண்ணன் மகிழ்ச்சியில் வாகனங்களில் நடுவே ஓடிட எதிர் பாராத விதமாய் ஒரு மிலிட்டரி லாரி கண்ணன் மீதி மோதியது. தீபன் இதை கண்டு உடனே தனது தந்தைக்கு தெரிவிக்க அவர் கண்ணனை மிலிட்டரி ஆஸ்பத்திரியில் உடனே கொண்டு சேர்த்தார். கண்ணனின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து அவர்களிடம் செய்தியை கூற குடும்பம் முழுதும் வருத்தத்தில் மூழ்கிட, .தீபனும் அவன் அப்பாவும் வேகமாக நடந்து பத்து நிமிட தூரத்தில் இருக்கும் கண்ணனின் வீட்டிற்கு வந்தனர். கண்ணனின் அப்பாவையும் அம்மாவையும் இரண்டு அக்காக்களையும் பார்க்கவே முடியவில்லை.என்ன சொல்லி தேற்றுவது எனஅறியாமல் வாசலில் அமர்ந்திருக்கையில் கண்ணனை தெரிந்த யாவரும் அவர்கள் வீட்டிற்கு வந்திட எல்லோரும் சோகம் தோழ்ந்த முகத்துடன் இருந்தனர் . ஆஸ்பத்திரியில் கண்ணன் இரவு முழுவதும் சரியாக நித்திரை கொள்ளவில்லை. அவன் அப்பா அம்மாவுக்கும் நித்திரையில்லை. விடிந்ததும் அம்மா மருத்துவரிடம் வினவ அவரும் கண்ணனுக்கு வெளியில் தெரியும் காயங்கள் சீக்கிரம் குணமாகி விடும் உள்ளே கல்லீரலும் மண்ணீரலும் சிறிது கிழிந்து அதனால் இரத்தம் பொய் கொண்டிருப்பதால் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை என அவர் உண்மையை சொல்ல . நாள் முழுவதும் கண்ணனும் தாயாரும் நிறையவே பேசியும் சிறிது விளையாடியும் மகிழ்ந்தார்கள். கண்ணனுக்கு பெரிதாக வேறு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. அன்று மாலை கண்ணன் சிறிது சோர்வுடன் காணப்பட்டான்.உடம்பில் சுரமும் சேர அவனை அணைத்து கொண்டு அம்மா படுத்திருந்தாள். மருத்துவர் வந்து ஒரு வாரம் இங்கு வைத்து பின்னர் அவனை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறி விட்டு சென்றார்.ஐந்து நாட்களில் கண்ணன் உடல்நிலை தேறிட எல்லோரும் மீண்டும் மகிழ்ச்சியில் அவனை அணைத்து வீட்டிற்கு செல்வதை பற்றி கூறிட ஆசையுடன் அவனும் அம்மாவுடன் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்த கண்ணனை வரவேற்க எல்லோரும் கூடி இருக்க அக்காக்கள் இருவரும் கண்ணனுக்கு பிடித்த பாடல்களை பாடி அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்க அவனும் தீபனும் கை கோர்த்து நடந்து உள்ளே வந்தனர்.இருவரும் மீண்டும் தங்கள் விளையாட்டுகளில் தங்கள் நேரத்தை கழிக்க அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அவர்களுக்கு மாற்றல் கடிதம் வந்தது இந்தியாவில் கேரளா நாட்டில் அவருக்கு புது அலுவலகம் அமைந்தது.
மீண்டும் அந்த அழகிய குடும்பம் களையோடு வாழ ஆரம்பித்தது.