தாயே

யாருக்காக தாயி அழுகுற
அனாதையா விட்டுப் போன
ஆத்த நெனச்சி அழுகுறியோ?
ஆளரவம் அத்துப் போன
வயல நெனச்சி அழுகுறியோ?
உம்பிள்ளை அறுத்துப் போட்ட
மரத்த நெனச்சி அழுகுறியோ?
தாயி நீ அழுதா
தனயன் என்ன செய்வேன்!
உனக்காகத் தான ஓடோடி வந்தேன்
உன் கண்ணீர் பார்த்து
உன் கூட சேர்ந்து
ஓயாம நானு ஒப்பாரி வைத்தேன்.
-( மேகம்)

எழுதியவர் : கேசவன் (20-Aug-16, 1:28 pm)
Tanglish : thaayaye
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே