நெஞ்சிற்கு சில பல வரிகளை எழுதினேன்

கண்களுக்கு ஒருசொல்லோவியம் வரைந்தேன்
-----அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள் !
புன்னகைக்கு சொல் முத்துக்களை கோர்த்தேன்
-----புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டே இருந்தாள் !
நெஞ்சிற்கு சில பல வரிகளை எழுதினேன்
-----நேச விரல்களால் புரட்டிக் கொண்டே இருக்கிறாள் !

----கவின் சாரலன்

பெண்ணின் ஓவியன் நீ ----கவின் என்ற கவிப்பிரிய ஷாபியின் பாராட்டலில்
மகிழ்ந்து போய் எழுதிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-16, 10:18 am)
பார்வை : 623

மேலே