கவிதை 117 வாழ்க்கை என்றும் முழுமதிதான்

வெண்மதி வானில் முளைக்கையிலேயே
மதியினில் உதித்தது நல்முத்துக்கள்

எடுத்து கோர்த்து ரசிக்கையிலேயே
நழுவிச் சிதறியது அம்முத்துக்கள்

திசைக்கொரு முத்தாய் பறக்கையிலேயே
தவித்து நீண்டது மணித்துளிகள்

மாற்றம் தந்த தடுமாற்றத்திலே
வறண்டுப் போனது நீர்த்துளிகள்

கீழ்வானம் சிவக்கும் நேரத்திலே
எழுந்தது மீண்டும் நம்பிக்கைகள்

தோல்விகள் என்பது வாழ்க்கையிலே
வெற்றிக்கு அமைந்திடும் படிகள்தான்

தளராத நெஞ்சம் இருக்கையிலே
வாழ்க்கை என்றும் முழுமதிதான்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Aug-16, 5:43 pm)
பார்வை : 85

மேலே