தினமணி கவிதைமணி தந்த தலைப்பு நெல்லுக்கு கிறைத்த நீர் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நெல்லுக்கு கிறைத்த நீர் ! கவிஞர் இரா .இரவி !

நெல்லுக்கு கிறைத்த நீர் வீணாவதில்லை
நெல் மணிகளாக விளைந்து செழிக்கும் !

முப்போகம் கண்டா விவசாயம் இன்று
முழுவதும் பொய்த்து ஒரு போகத்திற்கு வழியில்லை !

கர்நாடகமோ காவிரியைத் திறக்க மறுக்கிறது
கேரளமோ முல்லை பெரியாற்றில் உயர்த்திட தடுக்கிறது !

ஆந்திரமோ பாலாற்றின் குறுக்கே உயர்த்தி விட்டது
அண்டை மாநிலங்கள் வஞ்சித்து மகிழ்கின்றன !

இரண்டு வெவ்வேறு நாடுகள் கூட தண்ணீரை
இருவரும் அன்பாகப் பகிர்ந்து கொள்கின்றனர் !

ஒரே நாடான இந்தியாவில் தண்ணீர் பகிர்வதில்
ஒருவருக்கொருவர் எந்நாளும் சண்டை !

பகிர்ந்து உண்ணும் பழக்கம் புரியவில்லை
படிக்கவில்லை ஒப்பற்ற நம் திருக்குறள் !

வடக்கே ஆறுகளில் வெள்ளம் ஓடுகின்றன
தெற்கே ஆறுகள் பாலைவனம் ஆகின்றன !

ஒரே நேரத்தில் வெள்ளமும் வறட்சியும்
ஒரே நாட்டில் வருவது முறையோ சிந்திப்பீர் !

நெல்லுக்கு இறைக்க தண்ணிர் தாருங்கள்
நாளும் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் !

வீணாக்க கடலில் கலக்கும் தண்ணீரை
விவேகமாகப் பயன்படுத்திட முன்வாருங்கள் !

இருக்கின்ற அணைகள் இந்தியாவிற்கு போதும்
இனி புதிதாக யாரும் அணை கட்டக் கூடாது !

விவசாயிகள் தற்கொலை நாடாதிருக்க வேண்டும்
விவசாயிகள் மன மகிழ்வோடு வாழ வேண்டும் !

இமயம் முதல் குமரிவரை ஆறுகளால் இணைத்து
இந்தியாவை வளமான நாடாக மாற்றுவோம் !
.




http://www.eegarai.net/sta/eraeravi பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (31-Aug-16, 9:18 am)
பார்வை : 116

மேலே