அன்னை என்பவள்
அன்னை அறிவாள் பிள்ளைமொழி
அழுகை சிரிப்பு அனைத்திலுமே,
சின்ன வயதில் செய்யும்பல
சேட்டை யெல்லாம் அறிவதுடன்
பின்னை வாழ்வின் தேவையெல்லாம்
பெற்ற தாய்க்குத் தெரிந்திடுமே,
அன்னை யென்பவள் அதனால்தான்
அறியும் முதலாம் தெய்வமாமே...!
அன்னை அறிவாள் பிள்ளைமொழி
அழுகை சிரிப்பு அனைத்திலுமே,
சின்ன வயதில் செய்யும்பல
சேட்டை யெல்லாம் அறிவதுடன்
பின்னை வாழ்வின் தேவையெல்லாம்
பெற்ற தாய்க்குத் தெரிந்திடுமே,
அன்னை யென்பவள் அதனால்தான்
அறியும் முதலாம் தெய்வமாமே...!