தூவென தூவும் மழை

பள்ளிக்கூடம்
பக்கத்து அக்கத்து வீடுங்க
வெளயாடப்போற இடமெல்லாம் கதகதயா பேசி
என்னைக்கு என்னைக்குனு
ஒவ்வொரு நாளா
கடுப்பா கழிச்சி
ஒருவழியா வந்த பண்டிகைக்கு
அங்க கொஞ்சம்
இங்க கொஞ்சம்னு
வருஷம் பூறா
அப்பனாத்தா சேத்த காசுல
துணிமணியெலாம் வாங்கி
மத்தாப்பூ கனவோட இருந்த
சின்னஞ்சிறுசுக மனச
கூரவீட்டு மண்தரையில
நமத்துப் போன பட்டாசா
பொசப்பொசன்னு
பேஞ்சி கெடுத்துடுச்சே மழ...!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (10-Sep-16, 9:13 am)
பார்வை : 56

மேலே