யார்றின்று அறிந்தது யாரென்று அறிந்தது

கண்ட ஞாபகம் தானிருக்கிறது
கடல் ஏழு கடந்து கரை கண்டதிப்போது
நினைவிருக்கும் வகையில் .............
எவ்விடம் இருந்து இவ்விடம் வந்தாய்
மட்டும் கூறு என்னிடம் பற்றித்தானுன்னை
***************
வரிவடிக்க நானென்ன வைரமுத்தா
கவிகரைய நானென்ன கண்ணதாசனா
விறுத்தப்பாபாட நானென்ன கம்பனா
வெண்பாபாட நானென்ன புகழேந்தியா
வசைபாட நானென்ன காளமேகமா
அன்றியும் இன்றென்ன நான்
தத்துவம் தழைக்கும் தாகூரா
வித்தகம் விழியும் வின்ஸளையா
சரித்திரம் சமைத்த சார்லியா
இருத்திரம் இயைந்த (ஹி)இட்லரா
என்றல் அப்படி இல்லின்று
வென்றால் கூற கதை வேண்டுமே
நானறியாக் கேள்வியிது
யாரடா நான்.........
மானிடம் வர்க்கத்தில் சேர்ந்ததா உன்னை
தானிடம் மறந்து மண்ணாக போகிறாய்
கூறு.......யாரடா நான்
புலனைந்து புகுந்த சதுரமா நீ - குருதி
கலன் நைந்து என்றோ சடமாக போகிறாய்
கூறு .......யாரடா நான்
***************
ஆ...நாநுனியில் வந்த விடை
விடை தனலை அணைக்கிறது விழிநீர்
***************
வழியனுப்பிய விடைக்கு கம்பமெதட்க்கு
விழியோரம் வடியும் நீறுடைத்து
முதலில் கூறு நானாரென்று
**************
நீயா....நீதான் நான்..........
என்ன கேட்டாய் நீயாரென்றா
காலக்காவியத்தின் கடைவரி - நீ
சால சிறந்திடும் சமரசம் - நீ
ஏடுகள் பாடும் உயிர்பொருள் - நீ
நாடுகள் நாடும் நடுகல் - நீ
*************
நிறுத்தது போதும் நிறுத்துன் நியதினிரைகளை
நம்பமாட்டேன் நானுன்னை நயவஞ்சகா
யான்முன் பொய்யுரைக்கும் கையணிந்தாக ..........
கைவைக்கமுன் மெய்யுரைத்து முகம்காத்து
கூறு......யாரடா நான் ..........
************
மாட்டேன் ....நானென்ன நீ மட்டும் தானா
வரைவிலக்கணம் வகைய்யும்வரை கூறமாட்டேன்
தரை முடிவில் தென்படும் நாள் முன்
திறந்துபார் கண்ணுண்ணிரண்டையும்
இறந்து கிடைக்கும் உன் மனித பார்வை
வருகிறேன் நான் விடுதமிராண்டில்
************
நில்லாமல் நடந்து செல்கிறாய்
சொல்லாமல் கடந்து கொல்கிறாய்
விடைகூறமுன் விடைபெறுகிறாய்
நானென்ன நீயென்கிறாய்
நீயென்ன தனிநானில்லையென்கிறாய்
தடைதானென்ன கூறிவிட்டு செல்
யாரடா நான்........
யாரடா நாம்........

மரமா , மலையா , மண்ணா -- இல்லை அற்ப மானிடனா
விட்டெனை இங்கே கட்டமிடுகிறாய்
எங்கே நானுனை விடுதிப்பது
**********
வேறெங்கே ....புரட்டு உன் உள்ளப்பக்கத்தை
வேரங்கே விட்டிருக்கும் மீதென்தலையில்
ஆம் ..... நானுன் ஆழுள்ளம்
***************
எந்நாளுள்ளம் நீயென்றால்
நான் யார்......
**************
பாரை பணிந்து பார்
எது இயக்க இருக்க விரும்புகிறாய்
மரமா,மலையா , மானுடமா ......நிலைப்பேழையா
***************
நிலைப்பேழை .....ஆம் நிலைப்பேழை
ஆமாம் ......." அது நானாக " இருக்க விரும்புகிறேன்...............

ஆ நானறிந்தேன் .... நான் பல முகம்காட்டும் நிலைப்பேழை
என்றுதானறிந்தேன் .

ஜாஸிம் .............அல்லவே

எழுதியவர் : அத்னான் (16-Sep-16, 8:53 pm)
பார்வை : 46

மேலே