போராட்டங்கள்

அறவழிப் போராட்டம் என்பார்
பின்னர்
வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்
மக்களுக்குச் செய்யும் இடையூறை
மகேசனுக்குச் செய்யும் தொண்டாக நினைப்பார்.

அமைப்புகளையும் கட்சிகளையும் வளர்க்க
வன்முறையும் உயிரிழப்பும்
அரங்கேற்றும் அறிவிலிகள்
காந்தி மகான் பிறந்த
இந்த புண்ணிய பூமியில்!

எழுதியவர் : பூந்தளிர் (26-Sep-16, 5:57 pm)
சேர்த்தது : பூந்தளிர்
Tanglish : poraatangal
பார்வை : 264

மேலே