சட்டம் தன் கடமை செய்யும்

பணம் உள்ளவன்
பரிவு, கருணையுடன்......
ஒடுக்கப்பட்டவன் - மின்
கம்பியுடன்.....
சட்டம் ஓர் இருட்டறை
அறியாதவர்கள் மாட்டிக்கொள்வர் .......
பணம் இருப்பவருக்கு மட்டும்
பாதை, ஒளி கொடுத்து
பாதுகாக்கும்.......
நீதி பலகையில்
சட்டத்தின் முன் அனைவரும் சமம்!!
நிதி வரின் உனக்கு மட்டும்
விதிவிலக்கு தீர்ப்பில்.....
பழமையான சட்டங்களும்
பழகிய ஓட்டைகளும்
பாழாய் போனது சமூகம்
போதும் நீதி தேவதையே
சமூகம் சிறக்க -உன்
கண்கட்டை அவிழ்த்துவிட்டு
புதிய சட்டங்களில் உயர்த்திடு
இத்தேசத்தை........
-மூ.முத்துச்செல்வி