இயற்கை

இயற்கை
புல்லாங்குழலுக்கு கட்டுப்படும் காற்று
உன் கைகளுக்குள் அகப்படுமா!
கடல்நீரை குடிநீராக்கும் அறிவியல்
மழையே நீ எங்கு
கற்றாய் என கேட்டதுண்டா !
மரங்களை சாய்த்துப் போடும் காற்று
நாணலிடம் காட்டும் கருணையை
நீ அறிந்ததுண்டா !
பூக்கள் பூப்பெய்தினால் அதன் வண்ணம்
என்ற உண்மையை உணர்ந்ததுண்டா !
மகரந்த சேர்க்கை நிகழ்த்தும்
வண்டுகளை நீ
வாழ்த்தியதுண்டா!
சூரியனும் சந்திரனும்
கண்ணாமூச்சி
ஆடும் அழகை
கண்டதுண்டா!
ஆகாயம் முழுக்க
அள்ளிதெளித்த
நட்சத்திரம் பற்றி
யாரிடமாவது
அதிசயத்ததுண்டா !
வீடு உன் உலகம் என்றால்
அர்த்தமற்றது உன் வாழ்க்கை
உலகம் உன் வீடு என்றால்
அர்த்தமுள்ளது உன் வாழ்க்கை .
Posted by MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்