கவிஞர் சந்தோஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து

இறைவா
இவன் பெயரில் உள்ள சந்தோஷத்தை
இடம் பெயர்த்து வாழ்வின் முன்னால் வை
இவன் பெயரில் உள்ள தோஷத்தை
இடம் பெயர்த்து வாழ்வின் பின்னால் வை

இவனின் எழுத்து
புகை போடாமல்
இனிக்கின்றது பழுத்து

இவனின் இயற்பெயர்
எழுத்தாளன்
இயலாதார்க்கோ இவன்
குருதிக் கொடையாளன்

நட்புவட்டம் மிகுந்த
படையாளன்
நேர்மையினை நெஞ்சேந்தி
நடக்கும் நடையாளன்

திருப்பூர் கண்ட திருத்தரே
எழுத்தாளன் என்பதே உன் பேரே

முத்தங்களுக்காக யுத்தம் நடக்கும்
இங்கே இவன் ரத்தங்களுக்ககாக
நித்தம் உழைகின்றான்

இவன் ரத்ததானம் செய்யும் ரதம்
இவன் வாழவேண்டும் சதம்

அன்பு எழுத்து நண்பருக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : குமார் (29-Sep-16, 7:08 am)
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே