கவிதை 126 வாழ்வும் ஜொலிக்கத் தவறுவதில்லை

வெண்மதி வானில் முளைக்கையிலே
கதிரவன் விண்ணில் தெரிவதில்லை
நிதானம் மனதில் இருக்கையிலே
உணர்ச்சிகள் உள்ளத்தை தாக்குவதில்லை

அன்பு அதிகம் வருகையிலே
கஷ்டங்கள் பெரிதாய் உணர்வதில்லை
மன்னிக்கும் தன்மை கொள்கையிலே
தவறுகள் குறையாய் தெரிவதில்லை

உதவிகள் செய்வது தொடர்கையிலே
கவலைகள் அதிகம் வருவதில்லை
தோல்விகள் பாடமாய் அமைகையிலே
வெற்றிகள் வராமல் இருப்பதில்லை

உறவுகள் துணையாய் நிற்கையிலே
மரணங்கள் உள்ளத்தை வதைப்பதில்லை
நம்பிக்கை பலமாய் மாறுகையிலே
மாற்றமும் துன்பங்கள் தருவதில்லை

அனைவரையும் உடன்பிறப்பாய் நினைக்கையிலே
வாழ்வும் ஜொலிக்கத் தவறுவதில்லை
இறைவனை சரண் அடைகையிலே
தன்னை உணராமல் வாழ்வதில்லை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Sep-16, 7:32 pm)
பார்வை : 56

மேலே