உயிர்
நாகரிகக் கட்டுமானத்தில்
இடிந்து சிதைந்து
நொறுங்கியது வாழ்க்கை.
எந்தப் பக்கமும்
கை நீட்ட முடியாமல்
முள் மரங்கள்.
கொஞ்சுகையில் முகந்திருப்பவும்
கோபிக்கையில் எதிர்கொள்ளவுமாய்
வதைக்கிறது.
புறமொதுக்கிப் போகாமல்
படபடத்துத் தவிக்கிறது
உயிர்.