ஐக்கூ கவிதை (சென்ரியு)

வெட்டியவரின் முகத்தில்
வேகமாக தெறிக்கிறது..
இளநீர்.!

வேட்டு வைக்க
வெடித்தது..
பகை.!

தலைத்தெறிக்க ஓட்டம்
நேரமானதால்..
'குடி'மக்கள்.!

வலுவான வெட்டு
கண் திறந்தது..
நுங்கு.!

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (18-Oct-16, 1:03 am)
பார்வை : 107

மேலே