கிராமத்துப்பறவை

ஊரை விட்டுப் போறாளே,
ஊமத்தி கருத்தம்மா..
நெஞ்சில முள்ளத்தச்சிட்டு,
நேரத்தில போறாளே .....
வாக்கியா வரப்புகளும்,
அவ பேச்சக் கேட்பதெப்போ...
மந்தையில் அய்யனார் ஊமையா நிக்குறாரு...
அரும்பு மீசையிடம் , மனச தொலைச்சிட்டு ,
ஆத்தக் கடந்துப்புட்டு கண்ணீரில நீந்துறாளே..
ஜாதி,மத பேதமெல்லாம் இன்னும் இங்க போகலையே,
காதலுக்கு விடுதலை இன்னும் இங்க கிடைக்கலையே.!!
ஊரை விட்டுப் போறாளே,
ஊமத்தி கருத்தம்மா..
நெஞ்சில முள்ளத்தச்சிட்டு,
நேரத்தில போறாளே .....