மென்மையின் உண்மை

நான் என்ன புதுமைப்பெண்ணையா காதலித்தேன் !
பூவினும் மென்மையானவளை காதலித்தேன் !
அறிவுடையவளையா விரும்பினேன் !
அமைதியானவளை விரும்பினேன் !
சம உரிமையைப்பற்றியா யோசித்தேன் !
அவள் சமயலைப்பற்றியல்லவா யோசித்தேன் !
மழை தரும் மேகத்தையா எதிர்பார்த்தேன் !
வெண் மேகத்தைத்தானே எதிர்பார்த்தேன் !

வெண் மேகமும் என் கை சேர்ந்தது !
நீல வானில் மிதந்தோம் !
தரை இறங்கவேண்டிய நேரம் வந்தது !

காவிரியுடன் கங்கை சங்கமித்தால் இமயத்தின் புகழ் வறண்டுபோகுமாம் !
சொன்னது அவளின் பிறப்பிடம் !

கங்கையும் கண்ணீருடன் தடம் மாறியது !
வேறு என்ன செய்வாள் பாவம் !
நான் என்ன புதுமைப்பெண்ணையா காதலித்தேன் !
பூவினும் மென்மையானவளை அல்லவா காதலித்தேன் !

எழுதியவர் : ரங்கராஜ் சண்முகம் (21-Oct-16, 9:04 pm)
பார்வை : 140

மேலே