மறக்க இயலவில்லை

இழந்துவிடுவேன்...
இருந்தும் நினைத்து
வாழ்கிறேன் அவனை!..
தொலைத்துவிடுவேன்..
எனினும் தொடர்ந்து
செல்கிறேன் அவன் பின்னே!..
மறக்க இயலவில்லை
மனதில் பதிந்துபோனவனை..
விலக்க முடியவில்லை
நாளும் என் விடியலானவனை...
எனதானவனின் விழிகள்
எழுதிப் போன மடலெழுத்துகள்
விரவிக் கிடக்கும் என்றும்
எனதுயிரில் எங்கும்...
எனதானவனின் நேசப் புன்னகை
பேசிப் போன மொழி வண்ணம்
ஓடிக்கொண்டிருக்கும் என்றும்
எனதுதிரத்தில் எங்கும்...
அவனை மறக்க நினைப்பதிலே
கொஞ்சம் கொஞ்சமாய் - இன்னும்
அவனுள் தொலைகின்றேன்...
இழந்துவிடின் இவளவனை
இனி துறக்க எதுவுமிருக்காது
கடுகளவும் இவள் வாழ்வில்!..

எழுதியவர் : கவிப் பிரியை - shah (27-Oct-16, 9:50 pm)
Tanglish : marakka iyalavillai
பார்வை : 2081

மேலே