ஜன்னலோரம்
நானொரு கவிஞனாம்!
என் ஜன்னலிலும்
வாசலிலும் இரவில்
குடிபுகும் நிலவுகூறியது!
ஏனென்றேன்? நீ
வீண்னென்றது நிலவு;
வார்த்தைகளில் வலை செய்து
கண்களால் கொலை செய்யும்
அவளுக்கு வீசாமல்;
வண்ணவண்ண நட்சத்திரத்துடன்
வாய்பிளக்க விளையாடும்
எனக்கு வலை வீசுகிறாய்;
உன் ஜன்னலோரம்
பூக்கும் பூந்தோட்டவாசம்
அவள் கூந்தல் வீசும்
வாசத்திற் கீடாகுமா?
காகிதத்தில் எழுதும்
உன் வார்த்தைகள்
அவள் வாய்விட்ட
வார்த்தைக் கீடாகுமா?
வெள்ளை நிலாயென்னை
வெறுப்பேற்றி சொன்னது!