அவளும் நானும் - குமார் பாலகிருஷ்ணன்

நான்
அவள் திக்குமொழியில்
திக்குமுக்காடித்தான்
திளைக்கிறேன்!

அவள் சிக்குமுடியில்
சிக்கிக் கொள்ளத்தான்
நினைக்கிறேன்!

அவள் பனிக்கூழ்
சுவைக்கையில் இதழ் கரையும்
முதல்துளி ஆகிறேன்!

அவள் நிலா ரசிக்கையில்
புறா றெக்கையில்
இதயம் புதைக்கிறேன்!

அவள் வண்ணம்
என் கன்னம் நிறையாமல்
சுழலாதென் பூமி!

அவள்
அழகு அழகாக இருக்கும்போது
எடுத்துக்கொண்ட தாமி!


(தாமி - செல்பி)

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (31-Oct-16, 1:23 am)
பார்வை : 63

மேலே