வறுமையின் சங்கதிகள் --முஹம்மத் ஸர்பான்

பெண்-->செம்பரசம் பூ பூக்க
ரயிலு கிழக்கே போகுதையா
ஓலக் குடிசக் கூரையிலே
தொட்டில் சேலே ஆடுதையா
தாய்ப் பாலே தேடுதையா

ஆண்-->நீல பட்டுத் தோட்டம்
ஒரு சேலே தருவாயா
தூண்டில் போடும் விரலுக்கு
அவ மருதாணி வைப்பாளே
அவ கண்ணு மையாலே!

பெண்-->பச்ச வயித்துக்காரி
மாதாவிடாயும் வந்திருச்சி
நாலு காசு தேவலயே
என் மாமன் வந்தாலே
அவன் வேர்வ மருந்தாச்சே!

ஆண்-->பாவி நான் பாவி
உனே தவிக்க வெச்சனே
துளசி மணம் கமழ
மஞ்ச நிலவின் மடி மேலே
எந்தன் மூச்சு நிற்கனுமே!

பெண்-->மாமா உன் முகத்தே
நம்ம புள்ள காட்டுதையா
இறைவா என் இறைவா
உனே நாளும் தொழுதனே
ஏழே வறும தூங்கலயே
எந்தன் சேலே கசங்கலயே!

ஆண்-->கண்ணே என் கண்ணு
மனசு முழுக்க நீதானே!
பச்ச பாசி பாக்கையிலே
பச்சரிசி மணக்குதம்மா
இந்த பொழுது விடிஞ்சாலே
நம்ம வறும ஓடிடுமே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Nov-16, 8:32 am)
பார்வை : 88

மேலே