துறவுக்கு துணைநின்ற துணைவி
ஆசைகள் அனைத்தையும்
உதறிய சித்தார்த்தன்
துறவியானான் புத்தனாக
துறவுபூண்டு ஆண்டியாய்
திருவோடு கையிலேந்தித்
தெருத்தெருவாய் வலம் வந்தான்
தன் அரண்மனை வாயிலில் நின்று
புத்தம், சரணம், கச்சாமியெனக்
கையேந்தி யாசித்தான்
சித்தார்த்தனின் மனைவி யசோதா
பிச்சையிட வெளியில் வந்தாள்
இளையமகன் கூட வந்தான்
துறவியைக் கண்ட சிறுவன்
யாரம்மா இவரென்றான்?
யாரென்று அறிந்திருந்தும் அவள்
உன் தந்தையெனக் கூறாமல்
சாமியென்று சொன்னாள்
சாமியென்றதில் அகம் குளிர்ந்தாள்
அப்பாவென சொன்னால்
அப்பாவென மகன் அழைப்பான்
அதில் புத்தனின் கனவு கலையுமென நினைத்தாள்
ஆசையைத் துறந்த புத்தனின்
துறவுக்கு துணை நின்றாள்
துணவி யசோதா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
