வானவில்

எழுவண்ணம் கொண்டு
எழுந்தே நின்றாய்!!
வசீகரிக்கும் நோக்கோடு
வளைந்தே நின்றாய்!!!
கார்காலத்தில் மட்டும்
தாய்நாடு திரும்பும் நீ
வாழ்க்கை ப்பட்டது எந்நாட்டில்?
கதிரவன் பெற்றிட்ட மகளா நீ
அவனின்றி வெளித்தோன்ற
அஞ்சுகிறாய்!!!"

எழுதியவர் : தி. கலைச்செல்வன் (13-Nov-16, 11:11 pm)
சேர்த்தது : tkalaiselvan
பார்வை : 219

மேலே