மன்னிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே
வாழ்க்கை என்னும்
விசித்திரத்தில் சித்திரமாக
உன்னை கண்டேன்!,
சித்திரமாக உன்னை
கண்ட நாள் முதலே
சிதைய தொடங்கியது
என் இதயம் உன் அன்பிற்காக!!,
சிறகடித்து பறந்த
என் வாழ்வில் ஏனோ என்னை
சிறை வைத்தாய்
காதல் என்னும் சிறையில்!!!,
இனியவளே
இருமனம் என்னை
விரும்பியபோதும்
ஒரு மனதாக என் மனம்
உன்னை விரும்பியது!!!,
உயிர் உள்ளவரை தொடரும்
என்று உன்னை நினைத்தேன்
ஆனால்
நீ உறவே வேண்டாம் என்றாய்!!!!,
உயிர் எல்லாம் உன்னை வைத்து
வாழ வேண்டும் என்று
நினைத்தேன்
ஆனால்
நீ உரிமையை கொடுக்க
மறுத்தாய்!!!!!!,
அன்பே
என் மனம் மறக்க நினைக்கும்
உன் நினைவுகளுக்கும்,
வெறுக்க நினைக்கும்
கனவுகளுக்கும்
முற்று புள்ளி வைத்து
உன்னிடம் ஒன்று கேட்கிறேன்
"உயிரே" என்னை
மன்னிப்பாயா?!!!...............
...........................