அவளைக் கண்டபோது

அவள் இடுப்பில் ஏறிய
மண்குடம்
மகுடம் ஆனது
என் தலையில் ஏற்றியபோது

அந்தி சாயும் வேளையில்
இளந்தென்றல் சோலையில்
அவள் தலைமுடி சாயும் வேளையில்தான்
உணர்ந்தேன் நான் முடி சூடா மன்னன் என்று

அவள் நடக்கும் வீதியில்
ரவுடிகள் சுற்றுவதில்லை
மாறாய் கரடிகள் சுற்றுகின்றன
அவள் ஐம்பது கிலோ தேனல்லவா ?

அவளைக் கண்டபோதுதான்
அறிந்தேன்
ரம்பையும் மேனகையும்
இவளிடம் தங்கள் அழகினை
அடகுவைத்துவிட்டனர் என்று

காணும்போது மனதை
மகிழவைக்கும் அனைத்தும்
அழகு என்று

என் இதயம் அவள் கண்களால்
தீயேற்றி காதலுக்காக உருகும்
மெழுகு என்று

எழுதியவர் : குமார் (25-Nov-16, 8:18 pm)
பார்வை : 444

மேலே