இடைவெளி

திருவிழா கடைகளின் ஓசையிலே,
எனக்கு உன்மேல் இருந்த ஆசையிலே
யாரோ என்னை அழைப்பது போன்ற,
உணர்வொன்று என்னுள் தோன்ற
சட்டென்று நான் திரும்ப,
என் மனமோ உன்னை விரும்ப
மின்னல் போல் வெளிப்படும் உன் கண்களும்
மனதிலிருந்தும் வெளிவரா என் சொற்களும்
ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள,
இத்தனை வருட இடைவெளிக்கு பின்பும்
பேசாமல் நின்றோமே நாம் இருவரும்!!!

எழுதியவர் : nowsheen (3-Dec-16, 10:36 pm)
சேர்த்தது : nowsheen
Tanglish : idaiveli
பார்வை : 115

மேலே