மாண்புமிகு அம்மா கவிஞர் இரா இரவி

மாண்புமிகு அம்மா ! கவிஞர் இரா .இரவி !
ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணாய் இருந்தும்
ஆண்களை ஆதிக்கம் செய்த பெண்சிம்மம் நீ !
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை
எதிர்த்து உலகிற்கு பறை சாற்றினாய் !
இனவெறியன் இராஜபட்சேயின் முகத்திரையை
அகற்றி அகிலத்திற்கு அம்பலப் படுத்தினாய் !
பொருளாதாரத் தடை விதைக்க வேண்டும்
பொங்கி எழுந்து குரல் கொடுத்தாய் !
எல்லோரும் பயந்த ரவுடி இராஜபட்சே
உன்னைப் பார்த்துப் பயந்து நடுங்கினான் !
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி
சிம்ம சொப்பனம் ஆனாய் இராஜபட்சேக்கு !
நடுவர் மன்றத்தின் தீர்ப்பை போராடி
நடுவணரசு அரசிதழில் வெளியிட வைத்தாய் !
உயர் குலத்தில் பிறந்தபோதும் நீ
உன்னத இட ஒதுகீட்டை ஆதரித்தாய் !
சமூகநீதி காப்பதில் துணை நின்றாய்
சமமாய் மக்களை மதித்தாய் நீ !
காவிரிக்காக உச்சநீதிமன்றத்தில் போராடி
காவிரியில் நல்ல தீர்ப்புகளை பெற்றாய் !
லஞ்சம் ஊழலை மட்டும் ஒழிக்கவில்லை
தமிழ் வழிக்கல்வியை ஏற்கவில்லை !
மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திற்கு
நான் எழுதிய விமர்சனம் கண்டு என்னை !
அலைபேசியில் அழைத்து பாராட்டிய உந்தன்
அன்புக்குரல் நினைவில் என்றும் பசுமையாக !
தமிழ்நாட்டின் வரலாற்றில் உன் பெயர்
தன்னிகரில்லாப் பதிவு நிலைக்கும் உன் புகழ் !