பதுக்கல் பக்தி

மணல் கொள்ளை அடித்தும்
ஒப்பந்தக் கொள்ளையடித்தும்
கோடி கோடியாய்ப் பணத்தைப்
பதுக்கி வைத்திருப்பவர்களும்
இறைவன் கண்களிலும் மண்ணை தூவி
பக்திக் கொழுந்துகளாய் வலம் வருவார் நம் புண்ணிய பூமியில்.

ஆண்டவனே தங்க அணிகலனில்
ஜொலிக்கும் போது
கட்டுக் கட்டாய் பல கோடிகள்
பதுக்கி வைத்திருப்பவர்க்கு
தங்க ஆசை வராதென்று
யார் சொன்னது?

தங்கமான தங்கமும் இவரிடம்
கிலோ கணக்கில் தான்!
மூன்று பட்டங்களுக்குத் தகுதியானவர்:
மணல் கொள்ளை பேரரசர்
பதுக்கல் பணச் சக்கரவர்த்தி
இறை நம்பிக்கை இமயம்!

எழுதியவர் : மலர் (12-Dec-16, 2:49 pm)
பார்வை : 122

மேலே