நீ சொல்லும் வரை

மதம் விட்டு
மதம் மாற
சொன்னாலும்
கேட்ப்பேன் -மலரே
மனம் கொண்ட
என் காதல்
உன் மனதோரம்
குடிகொள்ளும் -பெண்ணே
சினம் கொண்ட
சிங்கம் தான் - நானோ
சிலவேளை சிறைபட்டு
போகுறேன் உன்னிடம் -தானோ
யார் சொல்லி
தடுத்தாலும் காதல்- நீ
சொல்லும் வரை
ஓயாது -மானே
பாழ்பட்ட -பட்ட
மனிதரால் -என்காதல்
பாடாய் படுகுது - கண்டு
நோய் பட்டு போச்சே- இதயம்
நோன்புகூட
இருந்தாலும் ஆறது -கண்ணே
சீர் கெட்ட காதலை
நம் சமுகம் சேர்த்திட
துடிப்பதை கண்டு
வாய்விட்டு அழுகிறேன்
வார்த்தை ஒண்டு இல்லாமல்
நீ சொல்லும் வரை
நான் காதலோடு காத்திருப்பேன்

எழுதியவர் : பிரியன் (14-Dec-16, 4:38 pm)
Tanglish : nee sollum varai
பார்வை : 491

மேலே