மாறாத பயம்
பள்ளிப் படிப்பை முடித்து
பல வருடங்களுக்குப் பிறகு
பள்ளிக்குச் சென்றேன்.
என்னோடு படித்தவர்கள்
அங்கில்லை!
எனக்கு கற்பித்தவர்கள்
அங்கில்லை!
எத்தனையோ ஆண்டுகள்
கடந்து போயிருந்தும்!
ஏனோ அந்த பயம் மட்டும்
இன்னும் போகவில்லை!..........
த.மணிகண்டன்