பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு கவிஞர் இரா இரவி

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !

உலகம் தோன்றியபோதே தோன்றிய
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !

உலகின் முதல் மனிதன் பேசிய
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !

பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !

மண் தோன்றும் முன்பே இந்த
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !

திருக்குறள் என்ற இணையற்ற நூலை
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !

காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !

தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !

ஆய்வாளர்கள் அனைவரும் அறிவித்த மெய்
அனைத்து மொழிகளின் தாய் தமிழ் மொழி !

காந்தியடிகளைக் கவர்ந்த மொழி தமிழ்
கடல் கடந்த புலம் பெயர்ந்தோர் பேசும் மொழி !

தமிழ்மொழி ஒலிக்காத நாடே இல்லை
தமிழ்மொழி ஒலிக்காத நாடு நாடே இல்லை !

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும்
பைந்தமிழ் இளமையாக புதுமையாக உள்ளது !

எந்த மொழியும் நம் தமிழ்மொழிக்கு
ஈடு இணை இல்லை என்பது உண்மை !

உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம்
ஒப்பற்ற தமிழுக்கு மகுடம் சூட்டுவோம் !

சங்கத்தமிழ் இன்றும் என்றும் நன்றே வாழும்
மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (21-Dec-16, 8:51 pm)
பார்வை : 91

மேலே