தெளிவாய் குழப்பும் அவள்

கண்ணீர் என்கிறாய்
இல்லையில்லை
புன்னகை என்கிறாய்
அதிலும் கலகம்
என்கிறாய்.....

வேண்டும் என்கிறாய்
வேண்டவே வேண்டாம்
என்கிறாய்.... பின்பு
வேண்டுகோள் விடுக்கிக்கிறாய்

கோளாறு என்கிறாய்
அதுவே சரி என்கிறாய்
ஆனாலும் அது
குழப்பம் என்கிறாய்....

பித்து என்கிறாய்
அதிலும் தெளிவுண்டு
என்கிறாய் ...கொஞ்சம்
தடுமாற்றம் என்கிறாய்

பிதற்றல் என்கிறாய்
அதுவே உண்மை
என்கிறாய்.....
அதிலுமுண்டு கலப்படம்
என்கிறாய்.....

நிழல் என்கிறாய்
இல்லையது நிஜம்
என்கிறாய்....
பின்னர் அதுவே
பொய் என்கிறாய்....

குழப்புகிறேன் என்கிறாய்
இல்லை நான்தான்
குழம்பி விட்டேன் என்கிறாய்
இதுவே என் காதல் என்கிறாய்...

எழுதியவர் : சப்னா செய்ன் (22-Dec-16, 11:58 am)
பார்வை : 219

மேலே