மழலை செல்வம்

உன் கொஞ்சும் கிளி பேச்சில்
மறந்தேன் என் கவலையை
உன் எச்சில் பண்டம் போதும்
அமுதம் வேண்டாம் எனக்கு..
உன் உதட்டசைவில்
கேட்டேன் புது மொழி
உன் கண் அசைவில்
கண்டேன் புது ஒளி
என்னவளே என் சின்னவளே
உன் மழலை சொற்களை
கோர்த்து எழுதலாம் புது கவி...
பார்க்க பார்க்க சலிக்காத
ஒரே முகம் உன் பிஞ்சு முகம்
சலித்து எடுத்த அழகை
பூசிக்கொண்ட சின்ன முகம்
முத்து வேண்டாம் எனக்கு
உன் முத்தம் ஒன்று போதும்....
உன் பிஞ்சு பாதம் என் நெஞ்சில்
பட்டால் அதில் எனக்கொரு நிம்மதி
உன் பூக்கரங்களை பற்றி நடந்தால்
அதில் எனக்கொரு ஆத்மதிருப்தி
உன்னோடு பேசி காலம் கழிக்க
இறைவனிடம் கேட்பேன் பிரியாவரம்...