நீ தான்டி என் உசுரு
கிராமியக்கவிதை
*******************************
நம்பியெனை வந்தவளே
பத்தரைமாத்துத் தங்கமே !
கரையோரமாக் காத்திருந்து
கண்சிமிட்டாமப் பார்த்தவளே !
பெருமூச்சும் வாங்கிடுமே
கருவிழியும் பூத்திடுமே
எனைக்கண்ட நொடியிலே !
மறைக்கத்தான் தெரியல
மறக்கவும் முடியலையே
மனசுலபட்டதக் கொட்டியே
எம்மனசில இடம்பிடிச்சியே
மணமுடிக்க வச்சியே !
கட்டிக்கிட்ட நாள்முதலா
வெட்டிப்பேச்சும் நின்னதே !
கண்ணாய் நினைச்சே
என்னையும் பார்த்துக்கறே !
நிறைஞ்ச நெஞ்சோட நீயும்
குறையொன்னும் சொல்லாம
இருக்கியே இதுவரைக்கும் !
கனவெல்லாம் கண்டிருப்ப
என்னவெலாம் ஆசையோ
சொல்லிடேன் உடனடியா
செய்திடுவேன் உனக்காக !
சந்தோசமா வாழ்ந்திடவே
முடிஞ்சதை செய்திடுவேன் !
நாமுந்தான் வாழ்வோமே
நாலுபேர் வாழ்த்திடவே !
பழனி குமார்

