ஒரு தலைகாதல்

உன் கண்ணிரண்டும் நோக்கும் நேரம்
நெஞ்சுக்குள்ளே கோடிமின்னல் தேடிவந்து பாய்கிறது

நீ இதழ் திறந்து பேசும் நேரம்
என் இதயமது மலர்கிறது

நீ கைவீசி போகையிலும் கலகலக்கும் கைவளைகள்
நெஞ்சுக்குள்ளே சங்கீதமாய்

உன்னிடத்தில் பேச வந்தா மேனியிலே குளிர் நிலவு

உன் தோள்மீது சாய்ந்து நானும்
தாலாட்ட எண்ணுகையில் தள்ளாடும் என் மனசு

உன்னுடனே தொடரும் நேரம்
நெஞ்சுக்குள்ளே தொடுவானம்
தூரமில்லை

நீ என் பார்வை விட்டு மறையும் நேரம்
விழி இரண்டும் நீரலைகள்
மனசுக்குள்ளே பேரலைகள்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 7:00 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 453

மேலே