உழைக்கும் பெண்

நான் உடைத்த கற்கள்
மெத்தையாய் இருக்க
இப்பொழுது உடைக்கும்
கற்களின் ஒலி உனக்கு
தாலாட்டாய் இருக்க
நீ கண்ணுறங்கு
என் கண்மணியே!

உனக்கு வரும் துன்பங்களையும்
நான் இந்த கல்போல் உடைப்பேன்.
கலங்காமல் கண்ணுறங்கு
என் கண்மணியே!

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (7-Jan-17, 1:43 pm)
பார்வை : 929

மேலே