சொர்க்கவாசல் திருவிழா --- வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சொர்க்கவாசல் திருவிழா --- வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
வைகுண்டப் பெருநாளாம் திருநாளில்
------ வைகுந்தன் சொர்க்கவாசல் சென்றிடுவோம் .
கைமேலே பலனனைத்தும் கிட்டிவிடும் .
------ காசினியில் எந்நாளும் நல்வாழ்வு .
மைகொண்ட ஆண்டாளின் பூப்பாதம்
------ மகிமையுடன் நிற்கின்ற கோலம்தான்
மையலினை நம்மாழ்வார் மலரடியில்
------ மனங்குளிர அரங்கனையும் வணங்கிடுவோம் .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

