உயிரே உறங்காதே

உயிரே உறங்காதே
உலகுக்கே சோறுமிட்டாய்
வந்தாரை வாழவைத்தாய்
பண்பாட்டை விதைத்து வந்தாய்
பாவிகளின் செயல் தன்னில்
உயிரை ஏன் உறங்க வைத்தாய்
உயிரே விழித்துவிடு
ஊருக்கே உறவு சொல்ல
காகம் இருக்க
உலகுக்கே வீரம் சொல்ல
தமிழன் இருக்கிறான்
ஜான்சிராணியோ
வேலுநாச்சி வீரம் கண்டே
வீரமானாள்
தற்கொலை படைகளோ
அஞ்சாத நெஞ்சடைச்சி
குயிலி அன்னையே
வழி காட்டியவை
வீர தமிழனே கோழையாக
மடிவதைவிட
வீரனாக மடிந்துவிடு

எழுதியவர் : சௌம்யா செல்வம் (11-Jan-17, 5:07 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 76

மேலே