சலாவு கவிதைகள்

இறைவன் வகுத்த கணக்கு ..
இடையில் நின்றது எதற்கு ..
வேண்டாத பொழுதில் ..
தோன்றாத காதல் ..
தீராது எளிதில் ..
தீண்டாத இன்பம் ..
பட்டது காதல் ..
சுட்டது நெஞ்சம் ..
வாடுது மனமும் ..
தேடுது உயிரும் ..
ஊற்றி விடு ஒரு துளி ..
உன் பார்வை எனும் ..
என் உயிர் துளி ..
உயிரும் உயிரும்..
இணையும் உறவு ..
ஒரு முறை அல்ல ..
பல முறை அல்ல ..
பூக்களை தாங்கும் ..
காம்பிற்கு வலிகளா ..
பழங்களை சுமக்கும் ..
கிளைகளுக்கு வேதனையா ..
பெண்ணே உன்னை ..
நெஞ்சில் சுமக்கும் ..
எனக்கும் சுகமே ..
வாழும் நாள் வரை அல்ல ..
வாழ்க்கை முடிந்த பின்னும் ..
இறைவன் வகுத்த கணக்கு ..
இடையில் நின்றது எதற்கு ..
.........................................
................................................சலா

எழுதியவர் : சலாவுதீன் (15-Jan-17, 10:39 am)
பார்வை : 56

மேலே